CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

இறை அன்பு

இறை அன்பு

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

எனக்கு அருமையான  பிள்ளைகளே! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்

ஒரு அருமையான கர்த்தருடைய தாசன் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் போக்கஸ். அவர் ஊருக்குள்ளே போகிற எல்லா மனிதரிடமும் இயேசுவையும் அவருடைய அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இதை அறிந்த அத்தேசத்து ராஜா இந்த மனிதனைப் பிடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார். அதன்படி அவரைக் கொலை செய்யும் படியாய்ப் போர்ச் சேவகர்கள் அந்த ஊர் வாசல் வழியாய் வந்தார்கள். அந்த அருமையான கர்த்தருடைய தாசன் இந்தப் போர்ச் சேவகர்களையும் பார்த்து அன்போடு அழைத்து அவர்களை விசாரித்து சாப்பாடுகள் பரிமாறினார். போர்ச் சேவகர்கள் தாங்கள் வந்த விஷயத்தை அவருக்கு இரகசியமாக சொன்னார்கள். நீங்கள் கொலை செய்ய விரும்புகிற மனுஷனை எனக்கு நன்றாகத் தெரியும். நாளைக்கு அவனை நான் உங்களுக்குக் காட்டித் தருகிறேன். நீங்கள் இன்றைக்கு உணவருந்தி இளைப்பாறுங்கள் என்று சொன்னார். அப்படியே அவர்கள் சாப்பிட்டு இளைப்பாறினார்கள்.

.

இரவு நேரத்தில் இவருக்கு மிகவும் போராட்டம் ஏற்பட்டது. ஆண்டவரை நோக்கி முறையிட ஆரம்பித்தார். “ஐயா! நான் என்ன செய்ய வேண்டும்? உமக்குச் சாட்சியாய் நான் ஜீவிக்க வேண்டுமானால் இரவு ஒளித்துப் போய்விடலாமா?” என்று வினவினார். அப்பொழுது ஆண்டவர், “மகனே எனக்கு விரோதமாய் ஜனங்கள் எழும்பின போது நான் ஒளிக்கவில்லை. நான் ஓடவில்லை. நான் பயந்து போகவில்லை, நான் பாடுகளுக்கு என்னை உட்படுத்தினேன். நீ நம்பியிருக்கிற இயேசு தம்மைப் பாடுகளுக்கு உட்படுத்தின இயேசு, பாடுபட்ட இரட்சகர் இயேசு நான்” என்றார். இதைக் கேட்டுத் தன்னை ஒப்புக் கொடுத்தார்.

.

இரவு வேளையில் தன்னுடைய தோட்டத்திலே தனக்காக ஒரு குழியை வெட்டி ஆயத்தப்படுத்தினார். காலையிலே போர்ச் சேவகரிடம் “நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் ஐயா, உங்களுக்காக எல்லா வேலையும் முடித்து வைத்து விட்டேன். நீங்கள் கொலை செய்ய வேண்டிய மனுஷனையும் கொண்டு வந்துவிட்டேன். நீங்கள் கொன்று புதைப்பதற்கு ஒரு குழியையும் என்னுடைய தோட்டத்திலேயே தோண்டிப் போட்டிருக்கிறேன். அவனைக் கொலை செய்து அந்தக் குழியில் புதைத்தால் போதும் என்று சொன்னார். போர்ச் சேவகர்களுக்கு மிகவும் சந்தோஷம். தங்களுடைய வேலை முடிந்தது. ராஜாவின் கட்டளையை நிறைவேற்றி விடலாம் என்று நினைத்து யார் அந்த மனிதன் என்று சந்தோஷத்தோடு கேட்டார்கள். நீங்கள் தேடி வந்த மனிதன் நான்தான்” என்று போக்கஸ். சொன்னார். உடனே அவர்கள் மிகவும் துக்கப்பட்டு ஐயா! நாங்கள் உம்மைக் கொலை செய்ய மாட்டோம். நிர் ஒளித்துக் கொள்ளும். இவ்வளவு நல்ல மனுஷனை எங்களால் கொலை செய்ய முடியாது என்றார்கள். அப்பொழுது அந்த பக்தன் “நீங்கள் என்னைக் கொலை செய்தால் நான் ஆண்டவருடைய ராஜ்யத்திற்குப் போவேன். இயேசுவோடு வாழுவேன். நீங்கள் என்னைக் காலை செய்யாவிட்டால் உங்களை ராஜா நிச்சயமாகக் கொலை செய்வார். நீங்கள் நரகத்திற்குப் போவீர்கள். ஆகையால் நீங்கள் நரகத்திற்குப் போவீர்கள். ஆகையால் நீங்கள் என்னைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்.

.

பிரியமானவர்களே, அவர்கள் அவரைக் கொன்று அவர் தமக்காகத் தோண்டி வைத்த குழியிலே புதைத்தார்கள். பரிசுத்தவானைக் கொலை செய்தவர்கள் பின்னர் யாருக்காக வாழ்ந்திருப்பார்கள்? இயேசு பாடு அனுபவிக்கிற ஒரு இரட்சகர், பாடு அனுபவிக்கின்ற ஒரு மனிதன் இயேசுவை நம்புகிற எல்லாரும் பாடு அனுபவிக்கின்ற மனிதர்களாய் இருக்கிறார்கள். இயேசு எதிர்த்து தேவன் அல்ல. இயேசு கிறிஸ்துவின் மார்க்கத்தைப் போல மரணத்தைப் பார்த்து பயப்படாத மார்க்கம் உலகத்திலே கிடையவே கிடையாது. இயேசுகிறிஸ்துவின் மார்க்கம் என்னவென்று சிலருக்குத் தெரியவில்லை.

.

இயேசுவை நன்றாக ருசித்த பவுல் அப்போஸ்தலன் இந்த சரீரத்தை விட்டு குடிபோகவும் கிறிஸ்துவினிடத்திலே குடியிருக்கவும் எனக்கு மிகுந்த ஆசையுண்டு. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். இப்பொழுது பானபலியாய் வார்க்கப்பட்டுப் போகிறேன். இதுமுதல் எனக்காக நீதியின் கிரீடம் வைக்கபட்டிருக்கிறது என்று கூறி சவாலிட்டார்.

.

அடுத்த விஷயத்திற்குள் நான் செல்கிறேன். இவர் பாடு அனுபவிப்பவர் மட்டுமல்லர் அவர் இரட்சிக்கிற தேவனாயும் இருக்கிறார் (Saving man). மனுஷனை இரட்சிக்க ஒரே ஒருவர் உண்டானால்  அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே. ஏன் இரட்சிக்க அவர் வல்லமையுள்ளவரென்று சொல்லுகிறோம் என்றால் அவர் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டி என்று யோவான் ஸ்நானகன் சாட்சி கொடுத்தார். விசுவாசிக்கிற தேவனுடைய பிள்ளைகள் இதை ஜெபத்தோடு கவனிக்க வேண்டும். இயேசு சிலுவையில் மனிதனுடைய பாவத்தை சுமந்து தீர்த்த படியினால் அவர் இரட்சிக்கிறவராய் இருக்கிறார்.

.

தொடரும்……

.

இயேசு பாவத்திலிருந்து ஜெயம் தருகிற ஒரு மகிமையான தெய்வமாயிருந்து நம்மை இரட்சிக்கிற ஆண்டவராய் இருக்கிறார். “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழே மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமே அல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை”

.

ஒரு மனிதன் சகதியும், அழுக்கும் நிறைந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். அவன் அந்தச் சேற்றுக்குள்ளே இருந்து ஐயா! என்னைக் காப்பாற்றும், என்னைக் காப்பாற்றுகிறது யார்? ”என்று சத்தம் போட்டான். சத்தம் போடும்பொழுது நீண்ட தாடி வைத்த ஒரு தியாகி கிண்ற்றினுள் எட்டிப்பார்த்தார். அவர், “தம்பி, நீ இந்தக் குடும்பத்திற்குள்ளே விழுந்திருக்கக் கூடாது. நீ கவனமாய் நடந்திருக்க வேண்டியதாய் இருந்தது. ஏறிவா, நான் உனக்கு உபதேசம் பண்ணுகிறேன் என்று சொன்னார்.

.

அப்பொழுது கிணற்றுக்குள் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கிற மனுஷன் “ஐயா! என்னைக் கொஞ்சம் கரையேற்றி விடுங்கள்., நீங்க சொல்கிறது எல்லாம் கேட்கிறேன். இனிக் கிணற்றில் விழமாட்டேன். தயவு செய்து என்னைக் கரையேற்றி விடுங்கள்.” என்று கதறினான். அவர் தாடியும் வஸ்திரமும் அழுக்காகக் கூடாது என்று நினைத்து மெல்ல நடந்து போய்விட்டார்.

.

மறுபடியும் ஒருவர் வந்தார். அவர் கையில் ஏராளமான தத்துவ புஸ்தகங்களும் சாஸ்திர புஸ்தகங்களும் இருந்தன. அவரைக் கண்டு சகதியில் கடக்கிறவன் முன்போல் சத்தம் போட்டான். உடனே புஸ்தக சாஸ்திரி “நீ வலது காலை முன் வைத்து நல்ல நேரம் பார்த்து, பூனை குறுக்கே குதிக்காத நேரம் பார்த்து போயிருக்க வேண்டியதாயிருந்தது.

இராகு காலத்திலே போனபடியினாலே கீழே விழுந்துவிட்டாய் இனிமேலாகிலும் நல்ல காலம் பார்த்து கரையேறு” என்று சொன்னார். அப்பொழுது கிணற்றுக்குள் இருந்த மனுஷன் “ஐயா! இனிமேல் ஒழுங்காக நல்ல காலத்தைப் பார்த்துதான் வீட்டை விட்டுப் புறப்படுவேன். இப்பொழுது என்னைச் சகதியிலிருந்து ஏற்றி விடுகிறீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர் கையிலே புஸ்தகங்கள் இருக்கின்றன. கீழே விழுந்து நபசமாகிவிடும். நான் இப்பொழுது வரமாட்டேன் என்று தத்துவங்களையும் உபதேசங்களையும் பேசிப், பேசிப் போனார்.

.

நான் சொல்கிறது உங்களுக்கு நன்றாக விளங்கும். ஒருவன் நாற்பது நாள் விரதம் இருந்தால் ஒரு பாவம் தீரும், என்று சொல்கிறான். அவ்விதமாய் விரதம் இருக்கிறவர்கள் எல்லாரும் கூடிக்குடித்துவிட்டு உடைத்துப் போடுவோம், அடித்துப் புசிப்போம், தீக்கொழுத்துவோம் என்று தீர்மானம் எடுக்கிறார்கள். ஏன் என்றால் விரதம் காக்கும் போது தீய சக்திகள் எழும்பி வந்து தீங்கு செய்யாது என்று நம்புகிறார்க்ள. இவ்விதமாய் பலவிதமான உபதேச தத்துவங்களையும் பேசுகிறார்கள். தத்துவத்தைப் பேசினதினால் சகதியில் விழுந்த மனிதன் மீட்கப்படமாட்டான்.

.

இரண்டு கைகளிலும் ஆணி பாய்ந்தவராய், விலாவிலே குத்தப்பட்டவராய் சகதியில் விழுந்து கிடக்கிறவன் பக்கமாய் வந்து, அழுகுரலோடு கிணற்றிலிருந்து போடுகிற சத்தத்தைக் கேட்டு  அவனை எட்டிப்பார்த்து “மகனே என்ன செய்கிறாய்? என்று கேட்டார்” அவன் “ஐயா, நான் சேற்றிலே அமிழ்ந்து கொண்டிருக்கிறேன். யார் யாரோ இந்த வழியாய் போனார்கள். ஒருவராகிலும் எனக்கு உதவி செய்யவில்லை.” என்றான். இரக்கம் நிறைந்த மனிதன் கிணற்றுக்குள்ளே ஒரு கயிறைப் பிடித்து மெதுவாக இறங்கினார். அவனிடம் நீ என்னைப் பிடித்துக் கொள். நானும் உன்னைப் பிடித்துக் கொள்கிறேன் என்று சொன்னார். அவரே இவனைப் பிடித்துக்  கொண்டார். அவர் இறங்கிய கயிறு வழியாக இரண்டு பேரும் ஏறி வெளியே வந்துவிட்டார்கள். கழியிலிருந்து வெளியே வந்த மனுஷன் அவரைப் பார்த்து “ஐயா, உமக்கு நன்றி நான் இனிமேல் குழியில் விழமாட்டேன். நான் சந்தோஷமாய்ப் போகிறேன்” என்று சொன்னான். அப்பொழுது வெளியே கொண்டு வந்தவர் அப்படியல்ல தனிமையாய்ப் போனால் மேலும் ஏதாகிலும் குழியிலோ, குளத்திலோ விழுந்து விடுவாய். ஆகவே உன்னுடைய கையை என்னிடம் தா என்று கேட்டு பின்னர் அவனுடைய கையைப் பிடித்து கொண்டார். இப்பொழுது இரண்டு பேருமாகச் சேர்ந்து பேசிக் கொண்டே நடந்து போனார்கள்.

.

இவர் இரட்சிக்கிற இயேசு பாவத்தில் அல்லது அசுத்தத்தில் விழுந்து கிடக்கிற உன்னை விடுவிக்கும்படியாய் மட்டுமன்று இனிமேல் விழுந்துவிடாமல் இருக்கும்படியாய், அதாவது மேலும் பாவம் செய்யாமலிருக்கும்படி உன்னோடு நடக்கிறேன் என்று சொல்கிற தேவன் மட்டுமன்று உனது வலதுகரத்தைப் பிடித்து நடத்தும் தேவன் உனக்கு இருக்கிறார். அவரைப் பார்த்து உன் கரத்தைப் பிடித்துதஷ் தாங்கும், என்னைத் தேற்றும் என்று ஒருவிசை கேட்க மாட்டாயா? சகோதரனே, சகோதரியே இயேசு உன்னை நடத்துகிற அதிசயத்தை நீ பார்க்கலாம். இந்த இயேசுவை பிலாத்து உனக்கு முன்பாய் சுட்டிக் காட்டி கொண்டிருக்கிறார். நீ இந்த இயேசுவை ஏற்றுக் கொள்ளலாமே.

.

.

அடுத்தபடியாய், அருமையானவர்களே இவர் மனுஷருடைய ஜீவியங்களை மாற்றுகிற தேவனாய் இருக்கிறார் என்று சொல்கிறேன் காட்டு மிராண்டிகளை நல்ல மனிதர்களாய் மாற்றினவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. இந்தப் பூமியிலே இயேசு அவதரித்ததால் காலம் இரண்டாகப் பிரிந்தது. கிறிஸ்துவுக்கு முன் என்றும் கிறிஸ்துவுக்கு பின் என்றும் மாறினது. உலக சரித்திரத்தை ஈண்டவர் இரண்டாக மாற்றினார். அன்று வரையறையிலும் பாவம் செய்த மனிதர்களை தண்டிக்கும்படியாய் சிலுவை மரத்தை கொடுத்தார்கள். சிலுவையிலே தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று தான் ஆண்டவருடைய வசனம் சொல்கிறது. சிலுவை அவமானத்தின் சின்னம். சிலுவை சாபத்தின் சின்னம். சிலுவை வெட்கத்தின் சின்னம். இயேசு சிலுவையில் மரித்ததும் சிலுவை ஆசிர்வாதத்தின் சின்னமாய் மாறினது. இன்றைக்கு சகோதரிமார்களுடைய கழுத்திலே சிலுவை ஆசிர்வாதத்தின் சின்னமாய்த் தொங்குகிறது. கல்லறைகளிலும் கோயில்களிலும் சிலுவை வைக்கிறார்கள். சாபத்தின சிலுவை ஆசிர்வாதமாய் மாறினது. பாவம் நிறைந்த மனுஷனை ஆண்டவர் தொட்டால் அவன் பரிசுத்தவானாய் மாறுகிறான். மீன் பிடிக்கின்ற செம்படவனான ஆத்திர சுபாவமுள்ள பேதுருவை ஆண்டவர் தொட்டார். இயேசுவுக்காக தலைகீழாக சிலுவையில் அறையப்படும்படி தன்னை ஒப்புக் கொடுத்த தியாகியாய் பேதுரு அப்போஸ்தலன் மாறினான். ஆபிரிக்காவிலே இருண்ட காடுகளிலே மனிதரைப் பிடித்துச் சாப்பிடுகின்ற நரமாம்ச பட்சிணிகளை இயேசு தொட்டார். அவர்கள் நாகரீகமுள்ள நல்ல மனிதர்களாக  மாறினார்கள். பாவம் நிறைந்த அநேகரை இயேசு தொட்டார். அவர்களெல்லாம் இயேசுவின் நாமத்தை உயர்த்துகிற மனிதர்களாய் மாறினார்கள். மனுஷரை மாற்றுகிறவர் ஆண்டவர் இயேசு.

.

குடிக்கிறவராய், சாராயக்கடை, பிராந்திக் கடை, ஒயின்கடை வைத்திருந்தவரும், பலவிதமான தெய்வங்களை ஆராதித்தவரும், மைனர் செயினும், பட்டு ஜிப்பாவும் போட்டு மைனர் வேஷம் போட்டுக் கொண்டிருந்த பாஸ்டர் பிரேம் பிரகாஷை அதே தேவன் மாற்றி மகிமையான அனுபவத்திற்குள் கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்துவின் மார்க்கத்தை வெறுத்தவரும், வேத புஸ்தக்கை கிழித்து தீயிலே சுட்டெரித்தவருமான சாது சுந்தர்சிங்கை பரிசுத்தவானாய் மாற்றினார். வெறுங்காலோடு கன்னியாகுமரி முதல் இமயம் வரையிலும் நடந்து இயேசுவின் நல்ல சுவிசேஷத்தை சொல்லிக் கொண்டே நடந்தார். மனிதனை மாற்றுகிறவர். ஆண்டவர் இயேசு கிறிஸ்து குடிகாரனை, குடிவெறியனை, கொலைபாதகனை, துன்மார்க்கனை இயேசு மாற்றுகிறார். எனக்கு அறிமுகமான மூன்று கொலை பாதகர்கள் இன்று ஆண்டவருக்கு அருமையான சாட்சிகளாய் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

.

உத்தமபாளையத்தில் ஒரு சபையையும் அனாதைச் சாலையும் நடத்திக் கொண்டிருந்த துரைசாமி என்ற சகோதரன் சொந்த மனைவியை கொலை செய்து திருச்சிச் சிறைச்சாலையில் தன் ஜீவியத்தை ஓட்டிக் கொண்டிருந்தான். ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினுடைய சுவிசேஷம் அவருக்குள் சென்றதும் அற்புதமாய் இரட்சிக்கப்பட்டார். நான் சென்னை சிறைச்சாலையில் ஊழியம் செய்யச் சென்றபொழுது ஒரு மனிதன் என்னைக் கட்டியணைத்து முத்தம் செய்தார். அவர் செய்த குற்றத்திற்காக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே இருந்து இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு இரட்சிப்பை் பெற்றார். பெங்களூர் சிறைச்சாலையிலே ஸ்ரீனிவாசன் என்ற பெயரோடு கொலைக் குற்றம் செய்தவர் சிறைச்சாலைக்குள் ஆயுள் கைதியாய் அடைக்கப்பட்டிருந்தார். ஆண்டவருடைய இரட்சிப்பைப் பெற்றார். அவர் தோமஸ் ஸ்ரீனிவாசன் என்ற பெயரோடு ஞானஸ்நானம் பெற்று கர்த்தருடைய ஊழியக்காரராய் ஜீவித்து வருகிறார். பாருங்கள் கொலை பாதகனை மாற்றுகிறவர் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நம்முடைய தேவன் எவ்வளவு அற்புதமானவர்.

.

.

அருமையானவர்களே உங்களுடைய ஜீவியத்தில் அருள்நாதர் இயேசுவின் தொடுதலை உணர்ந்திருக்கிறீர்களா? இயேசு உங்கள் ஜீவியத்தை மாற்றியிருக்கிறாரா? கிறிஸ்தவ பெயர் வைத்திருக்கின்ற அருமையானவர்களே இயேசுவை நீங்கள் ஆராதிக்கிறீர்களா? இயேசு உங்கள் ஜீவியத்தை மாற்றியிருக்கிறாரா? உன் ஜீவியம் மாற்ற்ப்படாவிட்டால் நீ இயேசுவை நோக்கிப்பார். நரமாம்ச பட்சிணிகளை மாற்றினவர், கொலை பாதகனை மாற்றினவர் உன்னுடைய ஜீவியத்தை மாற்றுவார். இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்று ஆண்டவர் சொல்கிறார். உன் இருதயத்தை தேவனுக்கு ஒப்புவித்தால் உன் இருதயம் தேவனுடைய ஆலயமாக மாறும். உன் ஜீவியம் பரிசுத்தமுள்ளதாக மாறும், இவர்தான் இந்த மனுஷன்.

.

பிலாத்து ஆண்டவரை சிவப்பு அங்கியும் முள்முடியும் தரித்தவராய் கைகள் கட்டப்பட்டவராய் வெளியே கொண்டு வந்து நிறுத்தினார். இதோ  இந்த மனுஷன், இவரிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை. நான் இவரை என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். அருமையானவர்களே பிலாத்து சொல்லாத, வேதம் சொல்கிற வார்த்தையை நான் சொல்கிறேன். உங்களுக்கு முன்பாக ழககள் கட்டப்பட்டவராய் சிவப்பு அங்கி அணிந்தவராய், முள்புடி தரித்தவராய் ஆண்டவர் இயேசு நிற்கிறார். இந்த மனிதன் யார்? அவர் தேவனால் உன்காக விசேஷமாய் அனுப்பப்பட்டவர். ஆரம்பம் முதல் முடிவு வரையிலும் எவ்வதமான பாவமில்லாத பரிசுத்தர். இந்த மனிதர் யார். உனக்காக பரிதபிக்கிற, உனக்காக விசாரப்படுகிற, உனக்காக மனதுருகிற, உனக்கு நன்மை செய்கிற தெய்வம் இந்த மனிதன், தன்னை குறித்து எந்த நியாயமும் சொல்லாதபடி, பேசாமல் அமைதியாய் இருக்கிற தெய்வம் இந்த மனிதன் யார்? உனக்காக பாடு அனுபவிக்கிற இரட்சகர். இந்த மனிதன் யார்? இரட்சிக்கிற மனிதன். யார் உன்னை மாற்றுகின்ற தெய்வம் அவர் இன்று உனக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கிறார். நீ என்ன செய்ய விரும்புகிறார் இன்றைக்கே தீர்மானித்துக் கொள்.

.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக பிலாத்து இந்த மனுஷனை நிறுத்தின போது இவன் வேண்டாம் இவரைச் சிலுவையில் அறையும், இவனைச் சிலுவையில் அறையும் என்று சொன்னார்கள். ஆகையால் பிலாத்து இயேசுவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார். இயேசுவைச் சிலுவையில் அறைந்த 40-ம் வருஷம் யூத ஜனங்களை ரோமர்கள் சிறைபிடித்தார்கள். கர்ப்பிணிகளுடைய வயிற்றைக் கிழித்துப் போட்டார்கள். 10 லட்சம் பேரைச் சிலுவையில் அறைந்தார்கள். பதினாயிரங் கணக்கான பேரை மாடுகளைப் போல பிணைத்து ரோமாபுரிக்கு அடிமைகளாய்க் கொண்டு போனார்கள். இயேசுவை ஏற்றுக் கொண்ட மரியாள், இயேசுவுக்கு நல்ல சாட்சியாய், இயேசுவின் அடியார்களாய் பரலோகத்தின் பிள்ளைகளாய் மாறினார்கள். இயேசுவை ஏற்றுக் கொண்ட ஸ்தேவானுக்காக பரலோகம் திறக்கப்பட்டது. இயேசுவை ஏற்றுக் கொண்ட பவுல் அப்போஸ்தலனுக்காக சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. இயேசுவை ஏற்றுக் கொண்ட பேதுருவுக்காய் அருமையான வீடு வைக்கப்பட்டிருந்தது.

.

இன்றைக்கு உனக்கு முன்பாய் உன்னை இரட்சிக்கிற இயேசுவை, நான் நடுவிலே வைத்திருக்கிறேன். நீ யூதர்களை போல இயேசுவை புஙம்பே தள்ளுவாயா? அல்லது தேவனுடைய பிள்ளைகளைப் போல இந்த மனுஷன் எனக்கு வேண்டும். அந்த ஆண்டவர் இயேசு எனக்கு வேண்டும். இயேசு என் ஜீவியத்தை மாற்ற வேண்டும் என்று இயேசுவுடைய பாதத்தில் உன்னைத் தாழ்த்தி ஒப்புவிப்பாயா? எல்லாரும் கண்களை மூடி ஆண்டவர் இயேசுவை மனதார உள்ளங்களில் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ள விரும்புகிறவர்கள் இப்பொழுது ஜெபிக்கலாம். இயேசுவே நஜர் எனக்கு வேண்டும். நான் உம்மை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லுங்கள். கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார்.

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]