சங்கிலி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பும்பொழுது ஒரு அம்பாசிடர் கார் நிறைய பொருட்களோடு வந்திறங்கினான். கழுத்திலும் கையிலும் தங்கம் மினுங்க ஒரு தோற்றம். அது பக்கத்துவீட்டு கண்மணியின் கண்ணில் பட தன் கணவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் உருவாகியது. . ஒன்றிரெண்டு நாட்கள் மனதில் அடக்கிவைத்த அந்த காரியம், அவளுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது. . அது அவள் மனதை உடைத்து வெளியே வந்த வார்த்தை. நீரும் இருக்கிறீரே பக்கத்து வீட்டு சங்கிலியைப்பாரும், என்று அடுக்க ஆரம்பித்த அவள், நீரும் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று முடித்தாள். . பாவம் அன்னார், சற்று நேரம் அமைதியாக இருந்தார். நம்ம […]
Womens