“நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்து வருகிற படியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.” (ஆதி 50:20) சோர்வடையாமல் முன்னேறின ஒரு மனிதன், யோசேப்பு. அவர் பதினேழாவது வயதில், தன் சகோதரர்களுடைய சுக நலன்களை விசாரிக்கப் போன போது, அவரை அடித்து, கொலை பண்ண முயற்சித்தார்கள். பாழும் குழிக்குள் போட்டார்கள். பிறகு, எகிப்துக்குச் செல்லுகிற, மீதியானியர் வியாபாரிகளிடம், இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர், மொழிதெரியாத எகிப்திலே, அடிமையாய் விற்கப்பட்டார். அங்கே, போத்திபாரின் மனைவி, யோசேப்பின் மேல் அநியாயமாய் குற்றஞ்சாட்டினாள். இதனால் யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார். ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகள் சிறைவாசம் செய்தார். உண்மையும் உத்தமமுமாயிருந்த அவர், துன்பத்தின் மேல் துன்பமே அனுபவித்து வந்தார். ஆனாலும் கர்த்தர் […]
BIBLE STUDIES