[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″] வாழ்க்கைப் பாதையில் நாம் பயணிக்கையில் இன்பம், துன்பம் எல்லாம் மாறி மாறி வரும்போது எமது விசுவாசத்தின் படிகள் எப்படி அமைகிறது..? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராய் நாம் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட போது நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இன்பமான வேளைகளில் நிலைகொண்டிருந்தாலும் பாடுகள், பிரச்சனைகள், உபத்திரவங்கள் என வரும்போது நிலைத்திருக்கின்றதா? அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 3:12-இல் இவ்வாறு கூறுகிறார். “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” ஆச்சரியமாயிருக்கிறதா? “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்“ என்று கூறிய அதே பவுல் அப்போஸ்தலன்தான் தீமோத்தேயுவுக்கு இப்படிப் போதிக்கிறார். […]