சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். (யோவேல் 2:15) உபவாசத்தின் அவசியம் நம்முடைய ஜெப வாழ்க்கையை அனல் மூட்டுவதற்கு உபவாசம் அவசியமாகிறது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் உபவாசத்திற்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இன்றைக்கு பலர் உபவாசம் என்பதை ஒருமுறை கூட இருந்ததில்லை என்கிறார்கள். ஒரு சமயம் பத்து நபர்களிடத்தில் நீங்கள் உபவாசம் இருந்ததுண்டா? என்று கேட்டேன். ஆறுபேர் இதுவரை இருந்ததில்லை என்கிறார்கள். இரண்டு பேர் எப்பொழுதாவது இருப்போம் என்கிகிறார்கள். இரண்டு பேர் மட்டும்தான் உபவாசத்தை பழக்கமாக்கிக் கொண்டிருந்தவர்கள். பத்தில் எட்டு பேர் உபவாசத்தின் வல்லமையை அறியாதிருப்பது வேதனைக்குரியது இல்லவா? மனிதனுக்கு ஏற்பட்ட முதல் சோதனையே உண்பதில்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருதயத்திற்கு செல்ல வயிறுதான் […]