1956 ஆண்டு 5 இளைஞர்கள் சுவிசேஷ பயணம் புறப்பட்டார்கள். அதுவே அவர்களுடைய கடைசிப் பயணமாயிற்று. அவர்கள் நித்திய மகிமைக்குள் பிரவேசித்தனர். அவர்கள் ஒரு பெரிய புனிதப் போரில் இறங்கி ஜீவனை இழந்து விடவில்லை. ஈக்குவடார் என்ற நாட்டில் “ஔகா“ என்ற இன்னும் கற்காலத்திலேயே வாழும் மலைவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை எடுத்து சென்றதின் ஒரே காரணத்திற்காக அவர்கள் மரணத்தை சந்தித்தனர். இரத்த சாட்சியாக மரித்தனர். ஔகா மலைவாசிகள் சிலரது அம்புக்கு அவர்கள் பலியானார்கள். சுவிசேஷத்தை எடுத்துச் சென்ற 5 இளைஞர்களுக்கு இப்படியொரு முடிவு வர வேண்டுமா? தேவன் இதை ஏன் அனுமதித்தார்? என்றெல்லாம் நம்மில் கேள்விகள் எழலாம். . ஆனால் அவர்கள் தங்களுடைய ஜீவனை இழந்தாலும் அவர்களுடைய தரிசனம் அழிந்து விடவில்லை. இரத்த சாட்சியாக […]