CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

ஒரே ஒரு மாற்று

ஒரே ஒரு மாற்று

[cmsmasters_row data_padding_bottom=”50″ data_padding_top=”0″ data_bg_parallax_ratio=”0.5″ data_bg_size=”cover” data_bg_attachment=”scroll” data_bg_repeat=”no-repeat” data_bg_position=”top center” data_color=”default” data_bot_style=”default” data_top_style=”default” data_padding_right=”3″ data_padding_left=”3″ data_width=”boxed”][cmsmasters_column data_width=”1/1″][cmsmasters_text animation_delay=”0″]

தூரத்தே ஒரு படகு வேகமாக நீர் வீழ்ச்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.  அப்படகிலேயே ஒரே ஒரு மனிதன் காணப்படுகிறான். அவனை ஆயிரக்கணக்கானோர் கரையிலிருந்து அனுதாபத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நீரோட்டம் அவனை வேகமாக இழுத்துக் கொண்டு செல்கிறது. நீர் வீழ்ச்சியிலிருந்து ஆழத்திலே விழும் நீரின் சத்தம் இடியைப் போல் கேட்கப்படுகிறது. அவனுக்கு யாதொரு மாற்றுமில்லை. ஒன்று அவன் தப்ப வேண்டும் அல்லது சாக வேண்டும். ஒன்று மீட்சி அல்லது மரணம்! அடுத்த வினாடி, அவன் மறைந்தான். அவன் மாண்டு போனான். அவனுக்கு வேறு வழி இல்லை.

.

சமாரியாவின் வாசலில் நான்கு குஷ்டரோகிகள் உட்கார்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் தீராத வியாதியால் வருந்திக் கொண்டிருப்பவர்கள்.  அத்துடன் பஞ்சத்தாலும்  வருந்திக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. நகரத்திற்குள் செல்வது மரணத்திற்கு ஒப்பானது. அவர்களுக்கு எவ்வித நம்பிக்கையும் காணப்படவில்லை. அதோ பாருங்கள்! அவர்களுக்கெதிரே கூடாரங்கள் காணப்படுகிறது! ஆம், அவர்களை சுற்றிலும் பகைவன் பாளமிட்டிருக்கிறான். ஒருவேளை பகைவர்கள் இக்குஷ்டரோகிகளின் வருத்தத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை ஜீவனோடு விடலாம். அவர்களுக்கு இந்த ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்திக் கொள்வார்களா?

.

குஷ்டரோகிகள் இருக்குமிடத்திலே தங்கியிருந்தாலும் மரணத்திற்கொப்பானது, மரணம் நிச்சயமானது. சமீபத்திலிருந்தது. பட்டணத்திற்குள் நுழைவதோ பைத்தியகாரத்தனம். அவர்களுக்குக் கிடைக்கும் சமயத்தை அவர்கள் ஆதாயப்படுத்தத் தீர்மானித்தார்கள். அவர்கள் பகைவர்களின் பாளயத்தை நோக்கி நடந்தார்கள். அங்கே ஆச்சரியம் காத்திருந்தது. அங்கே பகையாளிகள் காணப்படவில்லை. பகைவனின் ஆயுதங்கள் கேட்பாரற்று கிடந்தது. கூடாரங்கள் வெறுமையாயிருந்தது. ஆனால் அங்கே தானியம் திரளாயிருந்தது. திருப்தியாகச் சாப்பிட்டனர். உயிர் தப்பினர். (2 இரா 7:8)

.

ஒரு கலியான விருந்து! விருந்தாளிகள் கூடிவிட்டனர். கடைசியாக, இராஜாவும் வந்து விட்டார். ராஜா வரும்பொழுதே அவ்விருந்தின் முழு காட்சியையும் நோட்டம்விட்டார். அவருடைய கண்கள் கலியாண வஸ்திரமல்லாத ஒருவனைக் கண்டதும், அவர் ஊமையைப் போலானார். “அப்பொழுது, ராஜா பணிவடைக்காரரை நோக்கி, இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டு போய் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்”.

.

ஒவ்வொரு விருந்தாளியும் கலியான வஸ்திரத்தை தரித்திருக்க வேண்டும் என்பது பிரமாணம். அதிலே யாதொரு விலக்குமில்லை. இல்லையெனில் அவ்விருந்தில் பங்கு கொள்ள மற்ற தகுதிகள் கிடையாது. ஆகவே ஒரே ஒரு மாற்றுதான் இருந்தது. அவன் புறம்பே தள்ளப்பட வேண்டும்.

.

நன்பனே உன்னிடத்தில் கலியாண வஸ்திரமுண்டா? அல்லது அழுக்கடைந்த துணியைப் போன்ற உன் சுய நீதியோடு தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முயற்சிப்பாயா? உனக்கு யாதொரு மாற்றுமில்லை என்பதை நினைவு கூர்ந்து கொள். தேவனுடைய நீதியினாலே தரிப்பிக்கப்பட வேண்டும் அல்லது புறம்பான இருளிலே போடப்படுவாய்.

.

பசுமையான செல்வ செழிப்பான சமவெளி அழக்கப்பட போகிறதென்று எச்சரிக்கப்பட்டது. லோத்து சோதோமிலே இருந்தான். சோதோமிலே தங்கியிருப்பது மரணத்திற்கொப்பானது. அது நிச்சயமானது, தவிர்க்க இயலாது. அக்கினியும் கந்தகமும் எவ்வித பாரபட்சமுமின்றி யாவர் மேலும் பொழியப்படும். தேவ தூதர்கள் வந்தனர். எச்சரிக்கையொன்று தரப்பட்டது. லோத்து தயங்கினான். ஆனால் அங்கு அவனுக்கு யாதொரு மாற்றுமில்லை.

.

“உன் ஜீவன் தப்ப ஓடிப் போ, பின்னிட்டுப் பாராதே” என்று கையைப் பிடித்து அவனைப் பட்டணத்திற்கு வெளியே போய் விட்டார்கள்.

.

அவன் தெருக்களின் வழியே ஓடினான். நகரத்தின் வாசலின் வழியே ஓடினான். கடைசியாகத் தூரத்தே இருக்கும் குன்றிற்கு ஓடினான். அக்கினியும் கந்தகமும் விழுந்தது. சோதோம் அழிந்தது. ஓடி தப்பித்துக் கொள்வதே அவனுடைய நம்பிக்கை. சமயத்தை அவன் ஆதாயப்படுத்திக் கொண்டான். லோத்து இரட்சிக்கப்பட்டான்.

.

நாமும் தவறி இருக்கலாம். நமக்கு முன் காணப்படுகிறது. நாம் அழிவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கலாம், அதைக்குறித்து நாம் அறியாமலும் இருக்கலாம். என்றாலும் அது சத்தியம். தனக்கு முன்னே பள்ளத்தாக்கு இருப்பதை அறியாத குருடன், தான் செல்லும் பொழுது பாடிக் கொண்டே செல்கிறான்இ ஆனால் அவனுடைய அறியாமை அவனுக்கு நேர இருக்கும் ஆபத்தை மாற்றியமைக்காது. அவன் மரணத்தின் வாயிலை நோக்கி நெருங்கிக் கொண்டே வருகிறான். அவன் தன்னுடைய கடைசி அடியை எடுத்து வைக்கிறான். அடுத்த அடியிலே அவனுக்கு அழிவைச் சம்பாதித்துக் கொள்கிறான்.

.

பெரும் பள்ளத்தாக்கு அவனுக்கு முன் இருப்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் அவ்வறியாமை எத்தகைய மாற்றத்தையும் செய்யவில்லை. அவன் அதை அறியாதிருந்தான்.ஆனால் அவ்வறியாமை அவனுக்கு நேரிடப் போகும் ஆபத்தின் தன்மையை குறைக்கவில்லை. அன்புள்ள நன்பனே, அந்த குருடனைப் போல் நாம் தவறிவிட்டோம் என்பதை அறியாதிருக்கலாம். உணராமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய அறியாமை நமக்கு நேரப் போகும் பயங்கரமான நிலைமையை மாற்றாது.

.

நீங்கள் வேதத்தை விசுவாசியாதிருக்கலாம். நம்முடைய அவிசுவாசம் தேவனுடைய வார்த்தையை மாற்றாது. வேதாகமம் தேவனுடைய பிரமாணங்களை அறிக்கையிடுகிறது. இரட்சிப்படைதலே உங்களுடைய ஒரே நன்னம்பிக்கை. “திரும்புங்கள், திரும்புங்கள், நீங்கள் ஏன் சாக வேண்டும்” (எசே 33:11) . நீங்கள் மனந்திரும்ப வேண்டும் அல்லது மரிக்க வேண்டும். நீங்கள் மனந்திரும்பினால் மரிக்கமாட்டீர்கள், தேவன் நம்மை அழைக்கிறார். தேவன் “நீங்கள் ஏன் மரிக்க வேண்டும்?” என்று தெளிவாகக் கேட்டு, மரணம் அவசியமானதொன்றல்ல என்று சுட்டிக் காட்டுகிறார்.

.

தேவனுடைய விலக்கை அற்பமாய் எண்ணாதிருங்கள். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்திலே் பிரவேசிக்கமாட்டீர்கள்” (மத் 18:3). “மறுபடியும் நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள்” (லூக் 13:3).

.

மனந்திரும்பவில்லையெனில், நீங்கள் தவறிவிடுவீர்கள். நரகம் உங்களுடைய நித்திய சுதந்திரமாயிருக்கும். எத்தகைய பிழையையும் செய்யாதீர்கள். ஏமாந்து போகாதீர்கள். நீங்கள் மனந்திரும்பாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.

.

நீங்கள் நித்திய ஜீவனையடைந்தவர்களென்று உங்களுக்கு தெரியாதா? பல வருடங்களுக்கு முன்னே மறுபடியும் பிறந்தீர்கள். இருப்பினும் இவ்வுண்மையை  அறியாதிருக்கிறீர்களா? உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1 யோவா 5:13). நீங்கள் அறியாமலிருந்தால் சாத்தானா ல் குருடாக்கப்பட்டு, நித்திய காலமாக அழிந்து போவதை காட்டிலும் விடை காணும் வரை  மனதிலே குழம்பி கிடப்பதே மேல்.

.

தேவனுடைய ஆவியானவர் தாமே இவ்வசனங்களைக் கொண்டு உங்களுடைய உதாசீனத்திலிருந்து, சோம்பலிலிருந்து தட்டியெழுப்ப உபயோகிப்பாராக! நீங்கள் இரட்சிக்ப்பட்டீர்களா? அல்லது சாத்தானால் மரண தூக்கத்தில் தாலாட்டப்படுகிறீர்களா? என்பதைத் தெரிந்து கொள்ள சிறிதுஆழ்ந்து சிந்தியுங்கள். மேலும் ”யாரை சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள் (யோசு 24:15). இன்று நீங்கள் அவிவிதம் தெரிந்து கொள்ளவிட்டால் நான் மறுபடியும் வேண்டுகிறேன். நீங்கள் கண்டிப்பாக மனந்திரும்ப வேண்டும் அல்லது அழிவீா்கள்.

.

உங்களுடைய சிருஷ்டிகரோடே உங்களால் வழக்காட முடியுமா? இவ்வுலகையும் அதின் நிறைவையும் சிருஷ்டித்த தேவனை உங்களுடைய சிற்றறிவினால் கேள்வி கேட்க முடியுமா? இரட்சிக்கபட வேண்டும் அல்லது அழிய வேண்டும் என்று தேவனுடைய பொய்யற்ற, நிகரற்ற ஜீவனுள்ள வார்த்தை கூறுகிறது.  பின் ஏன் இன்னும் தாமதிக்கிறீர்கள்? “நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுளால் குந்திக் குந்திநடபீர்கள்” (1இரா 18:21)

.

நமக்காக தேவன் மரித்தார்.  நம்முடைய பாவங்கள் அவர் மீது விழுந்தன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய அநீதியையும், பாவத்தையும் ஏற்றுக் கொண்டு, அவருடைய ஜீவனை நமக்குக் கொடுத்தார். அதய்வ அன்பு அளவு கடந்து இரட்சிப்பின் வேலையை செய்து முடித்துவிட்டது. “பணமுமின்றி விலையுமின்றி” (ஏசா 55:1), ”தேவனுடைய கிருபை வரமோ….. நித்திய ஜீவன்” (ரோம 6:23).

.

சிநேகிதனே, இயேசுவண்டை வா, தேவனுடைய சத்தம் அழைக்கிறபொழுது, ஆண்டவராகிய கிறிஸ்து நம்மிடத்திலே இடம் கேட்கும் பரிசுத்தாவியானவர் நம்முடன் போராடும்பொழுதே வரவேண்டும். கிருபையின் நாள் முடியும் முன், மரணத்தின் இரவு நம்மை மேற்கொள்ளும் முன் நம்முடைய தண்டனை நித்திய காலத்திற்கும் முத்திரையிடப்படும் முன் வா! “திரும்புங்கள், திரும்புங்கள், நீங்கள் ஏன் சாக வேண்டும்” (எசே 33:11).

[/cmsmasters_text][/cmsmasters_column][/cmsmasters_row]