புதிய ஏற்பாட்டில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் விழிப்பு (Watch) என்பதைக் குறிக்கிறது. முதல் ‘அர்த்தம்’, ‘தூங்காமலிருப்பது’ ‘மனம் விழித்திருப்பது’ ஆகியவை. அதாவது, சுறுசுறுப்பாயிருப்பது, எச்சரிக்கையாயிருப்பது, மாறாமலிப்பது, விழிப்பாயிருப்பது ஆகியவைகள் சேர்ந்து இருப்பதாகும். இரண்டாவது அர்த்தம், ‘முழுவதும் விழிப்பாயிருப்பது’ – கவனம், அக்கரை, செயல்பாடு, எச்சரிக்கையாயிருப்பது இல்லையெனில் கவனமின்மை அல்லது சோம்பல் மூலம் அழிவைக் கொண்டு வரும் பேராபத்து திடீரென்று உருவாகிவிடும். மூன்றாவது அர்த்தம், ஆவியில் அமைதலுடன் இணைந்து இருப்பது, உணர்ச்சிவசப்படாத நிலை, மோசமான சூழ்நிலைகளினாலும் தொடப்படாத நிலை; எல்லாவிதமான குழிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் எச்சரிக்கையாயிருப்பது என்பவைகளாகும். இந்த மூன்று விளக்கங்களும் பரிசுத்த பவுலினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அவைகளில் இரண்டு விளக்கங்கள் ஜெபத்துடன் சம்பந்தப்படுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீவிரப்படுத்தப்பட்ட விழிப்பு, ஜெபத்துக்குத் தேவையான ஒன்றாகும். விழிப்பாயிருப்பது ஆவிக்குரிய முழு […]