CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Daily Devotions

29 Jan 2020

Our Faith will be Tested

“To obey is better than sacrifice, and to heed is better than the fat of rams”. – (1 Samuel 15:22). If we are going to live lives of faith, we must realize that our faith will be tested—not just once but many times over the course of our lifetime. We will experience great joy, but we also will have to face defining moments when the intent of our hearts is revealed and the level of our faith checked. Abraham loved […]

29 Jan 2020

கொள்ளைக்காரன் பர்க்

பர்க் பயங்கரக் கொள்ளைக்காரன். அவனின் துணிகரக் கொள்ளைகளுக்கு கணக்கில்லை. இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவன். சிறைச்சாலை அதிகாரிகள் பயப்படும் முறையில் சபிப்பான். . மூடிப் பிரசங்கியார் லூயிப் பட்டணத்தில் கூட்டங்கள் நடத்த அழைப்புப் பெற்றார். பட்டணத்திலுள்ள ஒரு பிரபல பத்திரிகை மூடியின் ஒவ்வொரு வார்த்தையையும் பிரசுரிப்பதாக விளம்பரம் செய்தது. எனவே மூடிப் பிரசங்கியார் தம் பிரசங்கங்களில் வேத வசனங்களையே மிகுதியாகத் தொகுத்துச் சொல்லத் தீர்மானித்தார். . ஒவ்வொரு பிரசங்கத்தையும் கவர்ச்சிகரமான தலைப்புக்களுடன் கொட்டை எழுத்துக்களில் பத்திரிகை வெளியிட்டது. லூயி பட்டணத்துச் சிறையில் பர்க் அடைபட்டிருந்தான். அவன் அறைக்குப் போக காவலாளருக்கும்கூட பயம்தான். ஜெயில் அதிகாரியை வாயில் வந்தபடியெல்லாம் திட்டுவான். . வழக்கமாக அவன் அறையில் நாள்தோறும் ஒரு தினப்பத்திரிகை போடப்படும். அன்று அப்பத்திரிகையில், […]

28 Jan 2020

எஜமானருடைய தொடுதல்

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.      (சங்கீதம் 118:22-23) ஒரு இடத்தில் ஏலம் விடுபவர் ஒரு பழைய வயலினை (violin) எடுத்து, ஏலம் விட ஆரம்பித்தார். அந்த வயலின் மிகவும் பழையதாக , தூசி படிந்ததாக, அதனுடைய நரம்புகள் தொய்ந்துப் போனதாக, அநேக நாட்களாக உபயோகிக்கப்படாததாக இருந்தது. ஏலம் விடுபவர் நினைத்தார், இதைப்போய் நான் ஏலம் விடுகிறேனே, யார் வாங்கப் போகிறார்கள்? என் நேரம் இதற்காக வீணாகப் போவதுதான் மிச்சம் என்று நினைத்தவராக, அதை ஏலம் விடுவதற்கு,ஒரு டாலர், இரண்டு டாலர் என்று ஆரம்பித்தார். ஒருவர் மூன்று டாலர் என்றுக் கூறவும், மூன்று டாலர் ஒரு தரம், மூன்று டாலர் இரண்டு […]

12 Apr 2018

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்.                           (எண்ணாகமம் 11:6) தேவன் இஸ்ரவேலருக்கு தூதர்களின் உணவாகிய மன்னாவை அதிசயவிதமாக வனாந்திரத்தில் தினமும் கொடுத்து போஷித்து வந்தார். அதை சாப்பிட்டு வந்த அவர்கள், ஒரு நாளும் சுகவீனமாய் இருந்ததேயில்லை. அவர்கள் தினமும் அந்த வனாந்திரத்தில் நடக்கவேண்டிய சக்தியையும், பெலனையும் அந்த மன்னா உண்டதினால் கிடைத்ததுமன்றி, அவர்கள் சுகமாய் இருந்து வந்தார்கள். இலட்சம் இலட்சம் மக்களுக்கு வானத்திலிருந்து அதிசயவிதமாக வருகிறதே என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியமாய் அதை பொறுக்கி சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் கொஞ்ச காலம் […]

17 Sep 2017

உபவாசித்து ஜெபிப்போம்

“….நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்….” (எஸ்தர் 4:16) எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது, “நீர் போய் சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து எனக்காக உபவாசம் பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம். இவ்விதமாய் சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன்” என்று சொல்லச் சொன்னாள். ராஜமேன்மை கிடைத்திருந்தால் துணிகரத்தோடு ராஜாவின் முன்னே செல்லலாம் என்று எஸ்தர் நினைக்கவில்லை. ராஜாவின் முன் செல்வதென்பது அந்நாட்களில் இலகுவானதொன்றல்ல. ராஜஸ்திரியாயினும் அது உயிரைப் பணயம் வைக்கும் விடயம். என்றாலும் தன் இனத்திற்கு வரவிருந்த அழிவைக்குறித்து ராஜாவுக்கு தெரியப்படுத்துவது என்ற முடிவுக்கு வந்தாள். அவள் ராஜ சமுகத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு அனுமதியும், ராஜாவின் […]