CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Womens

29 Jan 2020

யாரைக் காப்பாற்றுவேன்!!!

ஞாயிறு காலை ஆராதனை வேளை. பாடல்கள் முடிந்ததும் வயது முதிர்ந்த பாஸ்டர் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழும்பி மெள்ள நடந்து பிரசங்க பீடத்தை அடைந்தார். அன்று தேவ செய்தி அளிக்க வந்திருப்பவரைக் குறித்து மிகச் சுருக்கமாக சபையாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “தேவ செய்தி அளிக்க வந்திருப்பவர் என்னுடைய இளமைக் காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்” என்று மாத்திரம் சொல்லி விட்டு இறங்கிவிட்டார். நடுத்தர வயதைத் தாண்டிய செய்தியாளர் பிரசங்கபீடத்தில் ஏறினார். பிரசங்கத்தை ஆரம்பித்தார். .  “ஒரு தகப்பனார், அவருடைய மகன், மகனுடைய நண்பன் மூவரும் ஒருநாள் பசிபிக் கடலில் படகில் உல்லாசப் பயணம் செய்தனர். நண்பர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. கரையை ஒட்டியுள்ள பகுதியில் தான் பயணம் செய்து கொண்டு இருந்தனர். […]

29 Jan 2020

கட்டு மீறிய மகன்

(உவில் லாங்நெக்கர் ஓர் அமெரிக்க மிஷனெரி. ரோதா அவரது மனைவி. அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் ப்ராட். ப்ராட் எப்படி மனம்மாறினான் என்பதை தந்தை உவில் இங்கே சாட்சியாகச் சொல்லுகிறார்). .  “நானும் வரணுமா? சே, மோசம்! காரும் ஓட்டக்கார்! அதில் எட்டுப்பேர் பள்ளி மூட்டைபோல் அடைய வேணும்! அப்படி 6000 மைல் கை, காலை அசைக்க முடியாது. நீங்கள் எல்லாரும் போங்கள். நான் வீட்டில் என் நண்பரோடு இருக்கிறேன்” என்றான் என் மூத்த மகன் ப்ராட். . 1976-ம் ஆண்டு ஈஸ்டருக்கு முன் என் பிள்ளைகளுக்கு விடுமுறை. டொரண்டோ நகர்ப் பகுதியில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டேன். குடும்பமாகச் சென்று ஊழியம் செய்வது மிகுந்த பயன்தரும் எனக்கருதி குடும்பமாகப் புறப்பட்டோம். . என் […]

29 Jan 2020

காரிருள் சூழ்ந்து கொள்ளும் போது

அன்புள்ள மனைவியை அடக்கம் செய்துவிட்டு தன்னுடைய ஒரே மகளைத் தோளின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு துக்கம் தன்னை அழுத்த வேதனையோடு வீடு திரும்பினான் கணவன். அவள் ஆண்டவருடன் வாழச் சென்றவிட்டாள். அவனுடைய அகன்ற, பலமான தோள் பலம் குன்றி ஒடுங்கிவிட்டதை தோளில் உட்கார்ந்திருந்த மகள் உணர்ந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்ளத் தெரியாமல் தேங்கித் தேங்கி அழுது கொண்டிருந்தாள் மகள். மகளுக்கு அன்புத் தாயில்லாமல் கணவனுக்கு அன்பு மனைவி இல்லாமல் வீடு இருவருக்கும் வெறுமையாகக் காட்சியளித்தது. . இரவு வேளை வந்தது. மகள் அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிப் பழகியவள். இரவு வேளையையும் மீறிய காரிருள் தங்களைச் சூழ்ந்து கொண்டதை இருவரும் உணர்ந்தனர். மகள் அப்பாவின் காதருகே வந்து மெதுவாக “டடி இன்று […]

29 Jan 2020

தாய்மார்களுக்கு,

 கணவரின் அன்பை நிரந்தரமாகப் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னென்ன செய் யலாம் என்று கொஞ்சம் பார்ப்போமா.. கணவர் காலை அலுவலகத்திற்கு கிளம்பும் முன்பு அவரை ஜெபித்து அனுப்பி வையுங் கள். திரும்பி வந்ததும் ப்ரைஸ் தெ லார்ட் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் யென்று சொல் லுங்கள். அன்றைய நாள் இருவருக்குமே இனிய நாளாக இருக்கும். கணவருக்கு மரியாதை கொடுங்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். அதனால் பல பிரச்சனைகள் தீரும். மீறியும் வாக்கு வாதம் ஏற்பட்டால் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீங்கள் ஒரு முறை விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன். . அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான் என் கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது […]

28 Jan 2020

நமது சந்தோஷம் கர்த்தருக்குள்

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவா்களே, சமாதானத்தால் ஆசீா்வதித்து தமது ஜனத்தின் மேல் பிரியம் வைக்கும் (சங்.29.11,149.4) மகிமையின் கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள். எத்தனை பாடுகள், இடறல்கள், இன்னல்கள் வந்தாலும் சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்த சந்தோஷத்தை தேவன் தமது பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறார் அல்லேலூயா (1பேதுரு 1.8). விசுவாசத்திலே நிலைத்திருங்கள், நீடித்திருங்கள், நிரம்பியிருங்கள் (1கொரி 16.13). நமது சந்தோஷம் கர்த்தருக்குள் (பிலி 4.4) நமது சிந்தையை, யோசனையை, நினைவை, கற்பனையை (imagination), மனப்பான்மையை கவனமாக வைத்துக் கொள்வோம். நமது நினைவு மண்டலத்தில் நன்மையை யோசிக்க யோசிக்க கிருபையும் சத்தியமும் கடந்து வரும் (நீதி 14.22) நமது நினைவின் படி தான் நாம் வாழ முடியம் (நீதி 23.6). பிலிப்பியர் நிரூபத்தில் பவுல் எழுதியது போல ஒரே […]

28 Jan 2020

தொலைக்காட்சி நேரம் ஜெப நேரமாயிற்று

“1958-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9-ம் தேதி என் வாழ்வில் மறக்க மடியாத நாள். ஏனெனில் அன்று இரவுதான் என் டெலிவிஷன் பெட்டியை விற்க முடிவு செய்தேன். அன்று இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. குவென்னும்(மனைவி) குழந்தைகளும் நன்கு உறங்கிக் கொண்டிருந்தனர். நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பளிச்சென்று தெரியும் பட்டாடை அணிந்த மங்கையர் நடந்து செல்லும் ஒரு அலுப்புத் தட்டும் காட்சியை ஒளிபரப்பியது. ஒளிக்காட்சி காண்போரின் மனதைக் கவரும். அந்தப் பெண்ணின் உருவமோ அல்லது அலுப்புத்தட்டும் அவள் கதையோ என் உள்ளத்தைக் கவரவில்லை. எவ்வளவு முயன்றும் என் மனம் ஏனோ அதில் லயிக்கவே இல்லை. நான் சற்றென்று எழுந்து அந்த ஒளிக்காட்சியை நிறுத்தினேன். அந்த அழகிய பெண்கள் மறைந்தனர். நான் எழுந்து […]

14 Sep 2018

துக்கத்தை தூக்கியெறியுங்கள்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார். (சங்கீதம் 37:4) கவலை ஒரு கலையா? மனிதர்களை மரணம் தேடி வருவதில்லை, கவலைப்படுவதினால் இவர்களே தேடிபோய் தங்களை தாங்களே அழித்துக்கொள்கிறார்கள் என்றார். ஒரு பிரபல மனநல மருத்துவர். தேவன் தங்களுக்கு வைத்துள்ள சந்தோஷத்தை அனுபவியாமல், தேவையில்லாத மனக்குழப்பத்தால் தங்கள் ஆயுளை குறைத்து கொள்வோர் பலர். கிறிஸ்தவர்களால் அதிகம் வாசிக்கப்பட்டும், பலருக்கு மனப்பாடமாய் தெரிந்திருந்தும், ஒருமுறைகூட கீழ்ப்படியாத வசனம் “கவலைப்படாதிருங்கள்” என்பதாகத்தான் இருக்கும். இயேசு இந்த வசனத்தை ஆலோசனையாக சொல்லாமல் கட்டளையாக சொல்லுகிறார். எனவே நாம் கவலைப்படும்போது கட்டளையை மீறுகிறோம், அதாவது பாவம் செய்கிறோம். ஆம்! கவலைப்படுவது பாவம். சிலர் நேரம் ஒதுக்கி கவலைப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் கட்டாயம் கவலைப்பட்டே ஆக வேண்டும் […]

13 Jul 2018

நாவின் வன்மை

நாவிற்கு உன்னை அழிப்பதற்கும், வாழ்விப்பதற்கும் வல்லமையுண்டு. ஒரே நாவிலிருந்து ஆசீர்வாதமும் சாபமும் வெளிவருகிறது. அவ்வாறிருக்கக் கூடாது. இயேசுவானவரின் வார்த்தைகள் மிகத்தெளிவாயிருக்கின்றன. “இதயத்தின் நிறைவால் வாய் பேசும்.” உனது இதயம் வார்த்தைகளால் செயல்படுகிறது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டதினால் வருகிறது. பயம் பிசாசின் வார்த்தைகளைக் கேட்பதினால் வருகிறது. சில கிறிஸ்தவர்கள் தங்களது எதிரியாகிய பிசாசு சொல்லும் வார்த்தைகளையே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அந்த வார்த்தைகளால் கட்டப்பட்டிருக்கிறார்கள். சரியான அறிவுள்ள எவனும் தன்னைப்பற்றி தன்னுடைய விரோதி சொல்வதைச் சொல்லிக்கொண்டிருக்க மாட்டான். ஏனென்றால் உன் எதிரியின் வார்த்தைகள் உனக்கு விரோதமாகச் சொல்லப்பட்டவை. உன்னைப்பற்றி உன் எதிரி சொல்வதெல்லாம் திருடன், பொய்யன், பாவி என்பதே. அதை நீ ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? உன் வார்த்தைகளைக்கொண்டு உன்னை பிடிக்க வேண்டுமென […]

25 Aug 2017

அவள் மனம் கசந்து மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள். (1சாமு 1-10)

அன்னாள் மனம் உடைந்து வேதனைப்பட்டு சக்களத்தியினால் அவமானப்பட்டு குழந்தைப் பாக்கியம் இல்லை என்று கண் கலங்கினாள். எல்கானாவாகிய அவளது கணவர் இரண்டாவது மனைவி பெனினாளையும், பத்துப்பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிகபாசம் உள்ளவனாக இருந்தார். பெனினாளுக்கு, பிள்ளைகளுக்கும் ஒரு மடங்குகொடுத்தால், அன்னாளுக்கு இரண்டு மடங்கு கொடுப்பார். ஆனால் அன்னாளுக்கு தனக்கு குழந்தை இல்லை என்றவேதனை பெருமூச்சாகவும், ஆறாத்துயராகவும் கண்ணீருடன் இருந்து. பிள்ளைப் பாக்கியம் எனக்கில்லையே என்ற வேதனையுடன் தனது உயிரை தற்கொலை செய்யப்போவதில்லை மாறாக தேவனுடைய ஆலயத்திற்கு ஓடினாள். அங்கே சந்நிதானத்தில் அமர்ந்திருந்து கண்ணீரோடு அழுது அழுது முழங்கால் படியிட்டு சத்தம் வெளிவராமல் மௌனமாக ஜெபித்தாள். தன் மனப்பாரங்களை ஆண்டவரின் பாதத்தில் கண்ணீரால் ஜெபத்தோடு ஊற்றினாள். அவள் மனம் கசந்து “சேனைகளின் கர்த்தாவே தேவரீர் உமது […]

07 Jan 2015

ஏமாந்து விட்டோமா?

சங்கிலி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று திரும்பும்பொழுது ஒரு அம்பாசிடர் கார் நிறைய பொருட்களோடு வந்திறங்கினான். கழுத்திலும் கையிலும் தங்கம் மினுங்க ஒரு தோற்றம். அது பக்கத்துவீட்டு கண்மணியின் கண்ணில் பட தன் கணவரையும் வெளிநாட்டிற்கு அனுப்பவேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் உருவாகியது. . ஒன்றிரெண்டு நாட்கள் மனதில் அடக்கிவைத்த அந்த காரியம், அவளுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்தது. . அது அவள் மனதை உடைத்து வெளியே வந்த வார்த்தை. நீரும் இருக்கிறீரே பக்கத்து வீட்டு சங்கிலியைப்பாரும், என்று அடுக்க ஆரம்பித்த அவள், நீரும் எப்படியாவது வெளிநாடு செல்ல வேண்டும். நம்முடைய குடும்பத்தை நல்ல நிலைமைக்கு கொண்டுவரவேண்டும் என்று முடித்தாள். . பாவம் அன்னார், சற்று நேரம் அமைதியாக இருந்தார். நம்ம […]

14 Sep 2014

குடும்பத்தில் மனைவியின் பங்கு!

 வேதத்தின் வெளிச்சத்திலே நம்முடைய வாழ்கையின் பாதையை சீர்தூக்கிப் பார்போம். ‘உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது’ என்று தாவீது சங்கீதத்தில் கூறுவதை நாம் வாசித்திருப்போம். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் போதகத்தை கேட்பதோடு நின்று விடுகிறோம். அல்லது வாசித்த வேத பகுதியை நம்முடைய வாழ்கையில் நடைமுறை படுத்த தேவையான முயற்சிகளை எடுக்க தவறி விடுகிறோம். . இன்று குடும்பங்களில் மனைவியின் பங்கு குறித்து வேதத்தில் தேவன் என்ன கூறியுள்ளார் என்று பார்போம். பின்னர் அவ்வசனங்களுக்கு நம்முடைய பதில் என்னவென்றும் சிந்திப்பது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்கும். தேவன் நமக்கு உதவி செய்வாராக. . தனிப்பட்டவாழ்க்கை . 1. I தீமோத்தேயு 2:10 – தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும் […]

18 Jul 2014

எல்லோரும் அவளை புகழுகிறார்கள்!

உலகில் வாழ்கிற நாம் எப்படிபட்டவர்களாய் வாழ வேண்டும் என்பதற்காக பவுல் கலாத்தியர் நிருபத்தில் 5ம் அதிகாரம் 22,23 வசனங்களில் எழுதியிருப்பதை படிப்போமா? . ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. . இப்படிப்பட்ட ஆவியின் கனிகளை பெற வேண்டிய- பெண்களாகிய நாம் வாழ்வில் மிகவும் பொறுப்பான இடத்தில் இருக்கிறோம். . கணவர், பிள்ளைகள், உறவினர், பெற்றோர் யாவரையும் பராமரிக்கும், வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் நற்பணியில் நாம் இருக்கிறோம். . பெண்களாகிய நாம் பெலவீன பாண்டங்கள்தான்- ஆனாலும், இயேசப்பா நம்மை ஆவியின் கனிகளை பெற்று நல்வாழ்வு வாழ சொல்கிறார். . நாம் மனமகிழ்ச்சியோடு அனைவருக்கும் செய்யும் கடமைகளை செய்யும்போது, நம் பெலவீனமுள்ள சரீரத்தை பெலமுள்ளதாக்குகிற தேவனாகிய கர்த்தர் நம்மோடிருந்து நம்மை பெலப்படுத்துகிறார். . […]

14 Jul 2014

நீங்கள் கர்த்தரோடு இருந்தால் அவர் உங்களோடு இருப்பார்

எனக்கு அருமையான சகோதரிகளே, உங்களோடு தொடர்பு கொள்ள செய்த தேவாதி தேவனுக்கு கோடானு கோடி ஸ்தோத்திரம். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும். நாம் கர்த்தரோடிருக்க வேண்டும் என்றால் அதிகாலையில் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க வேண்டும். இயேசப்பா இதை தான் விரும்புகிறார். என் பிள்ளைகள் என்னை விரும்புகிறார்களா? என்னோடு பேசுவார்களா? என்னோடு வாழ்வார்களா? என்று தான் நம்மிடம் எதிர்பார்கிறார். நாம் அவருடைய வசனத்தை குறித்து தியானிக்க வேண்டும். நாம் அவ்வாறு தியானிக்கும்போது நமது மனம் தெளிவடையும். மன கலக்கம், மன பாரம் எல்லாம் நம்மைவிட்டு அகன்று போகும். அவர் நம்முடைய மனதை தெளிவுபடுத்துவார். அன்றைக்குரிய காரியத்தை குறித்து நம்மிடம் பேசுவார். நாம் மட்டும் அல்ல- நம் வீட்டில் உள்ளவர்களையும், நமக்கு அருமையானவர்கள் அனைவரையும் இதை […]

11 Feb 2014

நிச்சயம் நினைத்தருளுவார்

‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ (நெகோமியா 13:31). வேதத்திலுள்ள 66 புத்தகங்களும் ஒவ்வொரு விதமாக முடிவடைகின்றன. சில புத்தகங்கள் துதியோடு முடிவடைகிறது. பல புத்தகங்கள் வாழ்த்துக்களோடு முடிவடைகிறது தீர்க்கத்தரிசனங்களோடும் முடிவடைகிறது. ஏன்  புலம்பலோடும் கூட ஒரு புத்தகம் முடிவடைகிறது. ஆனால்  இந்த 66 புத்தகத்திலும் ஒரே ஒரு புத்தகம் ஜெபத்தோடு முடிவடைகிறது. ஆம்! நெகேமியா ஒரு பெரிய ஜெபவீராராக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் ஜெபத்தோடு கர்த்தருக்காக பெரிய காரியத்தை  செய்து இறுதியில் ‘என் தேவனே எனக்கு நன்மை உண்டாக என்னை நினைத்தருளும்’ என்று வேண்டிக்கொள்கிறார். ஒரு மனிதன் நம்மை நினைத்தருள வேண்டுமென நாம் எதையெதையோ செய்கிறோம்.  எப்படியாகிலும் அவரிடத்திலிருந்து நன்மையை பெறவேண்டுமென்று பல வழிகளில் பிரயாசப்பட்டு […]

06 Feb 2014

இயேசுவின்பாதங்களும் மரியாளும்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அவருடைய பாதங்கள் எங்கெல்லாம் பட்டதோ அந்த இடத்திலுள்ள ஜனங்கள் நன்மை பெற்றார்கள்! பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்!  அவருடைய வல்லமையுள்ள வார்த்தைகள் ஜனங்களைச் சந்தித்து அறியாமையை போக்கியது. ‘பாதம் ஒன்றே வேண்டும் இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம்’ என்று ஒரு பக்தன் பாடினான். இயேசுவின் பாதங்களை நாம் பற்றிப் பிடித்துக் கொள்ளும் போது அது நமக்கு புகலிடமாக அமைகிறது. பெத்தானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த மரியாளைக் குறித்து நாம் வேதத்தில் மூன்று இடங்களிலே வெவ்வேறான சூழ்நிலைகளில் காண்கின்றோம்.  இதிலே ஒரு விசேஷம் என்னவென்றால் அந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் மரியாள் இயேசுவின் பாதத்தண்டையிலேயே காணப்பட்டாள் ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டாள். மரியாள் இயேசுவின் பாதத்தில் பெற்றுக்கொண்ட மூன்று அனுபவங்களைக் […]

12 Dec 2013

உன்னை போதித்து நடத்தும் தேவன்

ஒரு பாலத்தின் அருகே அவளுடைய பழக்கடை இருந்தது. தன்னிடம் பழங்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வராத சமயங்களில் அவள் தனது பைபிளை எடுத்து வாசிப்பது வழக்கம். அவளது விலை மதிக்க முடியாத செல்வம் அது ஒன்றே! ஒருமுறை ஒரு வாடிக்கையாளர் கேட்டார். “எப்பொழுது பார்த்தாலும் எதை அம்மா வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?” “ஐயா, இது கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமம். அதைத்தான் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்”என்றாள் அவள். “ஏனம்மா, இது கடவுளுடைய வார்த்தைகள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? யாராவது அப்படிச் சொன்னார்களா?” என்று வாடிக்கையாளர் வியப்போடு கேட்டார். “அவரே அப்படிக் கூறியிருக்கிறார் ஐயா” என்றாள் அவள். “கடவுள் உங்களோடு தனிப்பட்ட முறையில் பேசி அப்படிச் சொன்னாரா?” சற்று நேரம் அவள் நிலை தடுமாறினாள்.வேதாகமம் கடவுளுடைய […]

12 Dec 2013

தவறான அன்பிற்குத் தப்ப

ஒரு பெண் உடை உடுத்தும் விதமும் அவளது பார்வையும், செய்கைகளும் அவளைச் சுற்றியுள்ள டீன் ஏஜ் வாலிபர்களை மட்டுமல்ல, 60 வயது வயோதிபரையும், 80 வயது கிழவனையும் பார்வைகள் வழியாய் பாதிக்கின்றது.    மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன,    நான் என் விருப்பம்போல் என் அழகினை வெளிப்படுத்த எனக்கு உரிமையுண்டு எனக் கூறாமல் உன் உடலையும்,    அழகையும், மறைவாயிருக்கவேண்டிய மார்பகங்களையும் மூடும்படி நீ உடை உடுத்த வேண்டும். இதை உன்னிடம் யாராவது கூறினால் கோபம் கொள்கிறாய். ஆனால் நீ கவர்ச்சியாக உள் அவயங்கள் தெரியும்படி உடுத்தும்போது பிறர் பாவ இச்சைகளால் தூண்டப்பட்டு அதினிமித்தம் பாலியல் பாவங்கள் செய்ய நீ காரணமாகிறாயே. எனவே எந்த வகையிலும் உன் நடை, உடை, பேச்சு பிறரைப் பாவத்திற்கு உள்ளாக்காமல் இருக்க நீ கவனமாய் […]