CANNOT COPY THE CONTENT. RESTRICTED BY ADMIN. THANK YOU.
logo

Category : Grow in christ

29 Jan 2020

எங்கே சமாதானம்

*உலகம் முழுவதும் சமாதானம் *இதுவே எங்கள் இருதயத்தின் கதறுதல் *இதுவே எங்கள் ஜெபம்  . மேற்கண்ட மூன்று வரிச் செய்தி சடாக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற சிறுமியின் சிலைக்கு கீழ் எழுதப்பட்டிருப்பவை. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது 1945ம் ஆண்டு ஓகஸ்ட் 6ம் நாள் ஹிரோஷிமா என்ற ஜப்பானிய நகரில் அமேரிக்க விமானம் மூலம் மிகச் சக்தி வாய்ந்த அணுகுண்டை (Atom Bomb) வீசியது. ”சிறுவன்” (Little Boy) என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்ட அந்த அணுகுண்டை கர்னல் பால் டிப்பெட்ஸ் (Colonel Paul Tibbets) என்ற விமானப்படை அதிகாரி அதை வீசினார். அணுகுண்டு வெடித்ததின் விளைவாக 38,000 அடி உயரத்திற்கு குடைக்காளானைப் (Mushroom) போன்ற தீப்பிளம்பு ஏற்பட்டது. அதை […]

28 Jan 2020

திருந்திய ஒரு திருடனின் அறிக்கை

பசுவராஜ் நிங்கப்பா (வயது 46) கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனது 16 வயதிலேயே அவன் திருட்டுத் தொழிலை ஆரம்பித்து விட்டான். இரவு வேளைகளில் வீடுகளுக்குள் ஜன்னல் கம்பிகளை வளைத்து (House Breaking theft be wrenching the window bar) நுழைந்து திருடுவதே அவனது பழக்கம். பல ஆண்டுகள் அவன் பிடிபடாமலேயே தப்பிக்கொண்டே வந்தான். அதனால் அவனுக்கு பயமில்லாமல் போயிற்று. துணிகரமாக செயல்பட ஆரம்பித்தான். பலநாள் திருடன் ஒருநாள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டான். 213 வீடுகளில் அவன் நுழைந்து திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடமிருந்த திருடிய சில பொருட்களை ஒப்படைத்தான். விற்ற பொருட்களை எங்கே விற்றான் என்பதையும் அடையாளம் காட்டினான். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்தார். […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் டாக்டர். ரோலன்ஸ் டெய்லர்

புரட்டுபதேசங்களை எதிர்த்த சுவிசேஷப் போர்வீரர் “தேவனுக்கு மகிமை. நான் எனது வீட்டிக்கு மிகவும் அருகில் இருக்கிறேன்”. கொலைக்களத்தை அடைந்த போது டாக்டர். ரோலன்ஸ் டெய்லர் கூறிய வார்த்தைகள் படைவீரர்களைக் கூட வியப்பிலாழ்த்தியது. ரோலன்ஸ் டெய்லர் இங்கிலாந்திலுள்ள ஸபோக் என்ற ஊரில் பிறந்தார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பிரசங்கிப்பதில் டெய்லர் மிகவும் கவனம் செலுத்தினார். புரோகிதராக மாற   வேண்டுமென்ற தனது ஆசை நிறைவேறியது. ஹாட்லி சபையில் செய்த அவரது ஊழியம் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக இருந்தது. சத்திய சுவிசேஷத்தை அறிவிக்க எந்தவித தயக்கமும் அவரிடம் இல்லை. அடித்தட்டு மக்களுக்கு அவர் ஒரு ஆதரவாளனாகச் செயல்பட்டார். உதவி தேடிவருபவர்களை திருப்பியாகத் திருப்பி அனுப்புவதில் டெய்லர் கவனம் செலுத்தினார். இவ்வாறு எல்லா நிலையிலும் சுவிசேஷம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த […]

28 Jan 2020

இரத்தசாட்சிகள் குப்றியானோஸ்

துன்புறுத்தியோருக்கு நன்மை செய்தவர் “என்னிடம் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காமல் உங்களுக்கு நியாயமாகத் தெரிவதை எந்தத் தண்டனையாக இருந்தாலும் தாருங்கள்” என்ற குப்றியானோசின் வார்த்தைகள் ஆட்சியாளரை அதிர்ச்சியடையச் செய்தது. “இவனை வெட்டி கொலை செய்யுங்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்ட போது “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறிய விசுவாசப் போர் வீரன்தான் கார்த்தேஜைச் சார்ந்த குப்றியானோஸ். ஆப்பிரிக்காவிலுள்ள கார்த்தேஜில் ஒரு செல்வந்தரின் மகனாக கி.பி 200-ல் பிறந்தார் குப்றியானோஸ். ரோமிலுள்ள புறஜாதிகளின் தேவர்களிடத்தில் நம்பிக்கை வைத்திருந்த குப்றியானோஸ் தனது பேச்சுத் திறமையால் அநேகரைக் கவர்ந்திழுத்தார். ஆடம்பர வாழ்க்கை குப்றியானோசை அகங்காரமடையச் செய்தது. எல்லா சுகங்களையும் அனுபவிக்கத்தான் மனிதர்ககள் படைக்கப்பட்டுள்ளனர். என்று குப்றியானோஸ் எண்ணினார். விக்கிரகங்களை சேவித்த குப்றியானோசின் வாழ்வில் மாறுதல் வரத்தொடங்கியது. கோசிலயஸ் என்ற […]

28 Jan 2020

உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் முன்மாதிரி

“நண்பனே , என்னைக் கடந்து செல்வதற்கு முன் சற்றே நில். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாயோ அப்படியேதான் நானும் இருந்தேன். இப்பொழுது நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நீயும் ஆவாய். ஆகவே நண்பனே, ஆயத்தப்படு, என்னைப் பின்பற்று.” இது இங்கிலாந்து தேசத்தில் வின்ட்சர் கேசில் (Windsor castle) அருகிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் ஒரு கல்லறையில் எழுதப்பட்டிருந்த கல்லறை வாசகம். இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர் இப்படியொரு விமர்சனம் செய்தார். “நீ எந்த வழியாய்ச் சென்றாய் என்பதை நான் அறிந்து கொள்ளாதவரை நான் உன்னைப் பின்பற்ற முடியாது.” அவர் சொல்வது சரியே. மரணத்திற்குப் பின்னான நித்திய வாழ்வில் இயேசுவோடு சதாக்காலமும் வாழத்தக்கதான சரியான வழியில் செல்கிறோமா என்பதுதான் காரியம் ஏனென்றால், மரணம் தற்செயலாக ஏற்படுகிற நிகழ்வு […]

14 May 2018

ஜெபமும் விழிப்புடனிருத்தலும்

டேவிட் பிரைனர்ட் (David Brainered) அவர்களுடைய பரிசைத் திருடிவிட வேண்டும் என்கிற தீர்மானத்தோடு மாயக்கார எதிரி அவரைத் தொடர்ந்து சென்றான். தன்னுடைய போர்க்கவசத்தை ஒருபோதும் விட்டுவிடக்கூடாதென்றும் படுத்து இளைப்பாறும்போதும் அதை அணிந்திருக்க வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். அவருடைய கவர்ச்சிகரமான ஆடையின் அழகைக் கெடுத்த கறைகள், பளிச்சென்று பிரகாசிக்கின்ற கேடயத்தில் ஏற்பட்ட புள்ளிகள் ஆகியவைகள் நமக்குப் பார்க்க முடியாதவைகள்; ஆனால் அவருக்கோ அவைகள் பெரும் வருத்தத்துக்கும் மிகுந்த வாஞ்சைக்கும் மூல காரணமாயிருந்தன. எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் பவுல் கிறிஸ்தவ இராணுவ வீரனைப்பற்றிக் கொடுத்துள்ள வர்ணனை கச்சிதமாகவும் முழுமையாகவும் இருக்கிறது. உயர்ந்ததும் தாழ்ந்ததுமான காலம், ஒளியும் இருளுமான காலம், வெற்றியும் தோல்வியுமான காலம் ஆகிய அநேக ஏமாற்றங்களும் இரக்கங்களுமான காலங்கள் நிறைந்த போராட்டத்திலேயே அவன் எப்போதும் […]

27 Apr 2018

ஜெபமும் விழிப்புடனிருத்தலும் 2

புதிய ஏற்பாட்டில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் விழிப்பு (Watch) என்பதைக் குறிக்கிறது. முதல் ‘அர்த்தம்’, ‘தூங்காமலிருப்பது’ ‘மனம் விழித்திருப்பது’ ஆகியவை. அதாவது, சுறுசுறுப்பாயிருப்பது, எச்சரிக்கையாயிருப்பது, மாறாமலிப்பது, விழிப்பாயிருப்பது ஆகியவைகள் சேர்ந்து இருப்பதாகும். இரண்டாவது அர்த்தம், ‘முழுவதும் விழிப்பாயிருப்பது’ – கவனம், அக்கரை, செயல்பாடு, எச்சரிக்கையாயிருப்பது இல்லையெனில் கவனமின்மை அல்லது சோம்பல் மூலம் அழிவைக் கொண்டு வரும் பேராபத்து திடீரென்று உருவாகிவிடும். மூன்றாவது அர்த்தம், ஆவியில் அமைதலுடன் இணைந்து இருப்பது, உணர்ச்சிவசப்படாத நிலை, மோசமான சூழ்நிலைகளினாலும் தொடப்படாத நிலை; எல்லாவிதமான  குழிகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் எச்சரிக்கையாயிருப்பது என்பவைகளாகும். இந்த மூன்று விளக்கங்களும் பரிசுத்த பவுலினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன அவைகளில் இரண்டு விளக்கங்கள் ஜெபத்துடன் சம்பந்தப்படுத்திப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தீவிரப்படுத்தப்பட்ட விழிப்பு, ஜெபத்துக்குத் தேவையான ஒன்றாகும். விழிப்பாயிருப்பது ஆவிக்குரிய முழு […]

13 Mar 2018

உண்மையான ஊழியன்

மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசியர் 6:8) வீதியின் ஓரம் ஒரு குடையின் கீழ் செருப்பு தைத்துக்கொண்டு போகிறவர்கள், வருகிறவர்களின் ஷுக்களை பாலிஷ் செய்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன். தகப்பனது தொழிலை இளமையிலேயே கற்றுக்கொண்டது நல்லதாய் தோன்றியது. அவர் இறந்த பிறகு, அவனது தாயை கவனிக்க  அது கைகொடுத்தது. அச்சிறுவன் காசுக்காக கடமையே என தன் வேலையை செய்யமாட்டான். யாரோ ஒருவர் பாலிஷ்போட தங்கள் காலணியை அவன் முன் நீட்டியதும் நிமிர்ந்து பார்த்து சிரித்த முகத்துடன், சிறப்பாய், நேர்த்தியாய் அதை செய்து முடிப்பான். எப்போதும் வழக்கமாய் வரும் ஒருவர் ஒரு நாள் அவனிடம், மிகவும் சிரமத்தை எடுத்து கவனமாய் வேலை செய்கிறாயே, இதே வேலையை செய்யும் மற்றவர்களிடம் இல்லாத ஏதோ […]

17 Nov 2017

Why Should You Attend Church Meetings?

Why should Christians attend worship meetings of the local church? How important are worship, praise, Bible study, teaching, and learning? What influence does our example have on others, and what can we learn from the example of Jesus and His apostles? What can we learn from Bible teaching about priorities and devotion to serving God? Introduction: Many New Testament passages describe local congregations of God’s people conducting regular meetings to worship God and study His word (Acts 20:7; 11:26; 1 Corinthians 11:17-34; […]